சிறிலங்கா பிரதமரைச் சந்தித்த இந்திய தூதுவர்

சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவை, கொழும்புக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்றுக்காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது, கடந்த மாதம் சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட பின்னர், பரஸ்பர ஒத்துழைப்பு குறித்த பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக சிறிலங்கா பிரதமர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!