சமூக வலைத்தளத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் வதந்தி பரப்பியவருக்கு 10 ஆண்டு ஜெயில்!

ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் அகமது மன்சூர். இவர் சமூக வலைத்தளத்தில் ஐக்கிய அரபு அமீரக அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் குறித்து தவறான மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான தகவல்களை பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பான வழக்கை அபுதாபி நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது மன்சூர் தனது தவறான பதிவுகளின் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் கவுரவத்தையும், அரசியல் தலைவர்களையும் இழிவுபடுத்தி விட்டதாக நீதிமன்றம் கூறியது. இதையடுத்து, அகமது மன்சூருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அபுதாபி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் மன்சூருக்கு ரூ.1.83 கோடி (1 மில்லியன் திர்ஹாம்) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!