ஓரிரு வாரங்களுக்குள் அர்ஜூன மகேந்திரன் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார் – திலங்க

ஓரிரு வாரங்களுக்குள் மத்திய வங்கயின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வரக் கூடியதாக இருக்கும். அதற்காக சட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

அனுராதபுரத்திலுள்ள உயர் தொழிநுட்ப நிறுவனத்திற்கு நேற்று கண்காணிப்பு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த இராஜாங்க அமைச்சர் அங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!