சீனப் படை அதிகாரிகள் சிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சந்திப்பு

தியத்தலாவவில் உள்ள சிறிலங்கா இராணுவ பயிற்சி அகடமியில் சீனாவின் நிதியில் கட்டப்படவுள்ள அரங்க வளாகத்துக்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு சீன படை அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்கா வந்துள்ளது.

சீன இராணுவத்தின் கேணல் சாங் லூஹூவா தலைமையிலான இந்தக் குழுவினர், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

கொழும்பில் உள்ள சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் கடந்த புதன்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன் போது, சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் இந்த திட்டம் தொடர்பாகவும், ஏனைய தொழில்நுட்ப உதவிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!