முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாத் பதியுதீனிடம், குற்ற விசாரணைத் திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாகவே, ரிஷாத் பதியுதீனிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்கு அமையவே, ரிஷாத் பதியுதீனிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, முன்னாள் அமைச்சர ரவூப் ஹக்கீமிடமும் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றத்திடம் குற்ற விசாரணைத் திணைக்களத்தினர் அனுமதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!