தூதுவர்கள் நாடு திரும்ப இரண்டு வார காலஅவகாசம்

வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் அரசியல் ரீதியான நியமனங்களைப் பெற்ற தூதுவர்கள் நாடு திரும்புவதற்கு வழங்கப்பட்டிருந்த காலஅவகாசம் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் வெளிநாடுகளில் அரசியல் ரீதியாக நியமனங்களைப் பெற்றிருந்த தூதுவர்கள், அதிகாரிகளை டிசெம்பர் 31ஆம் நாளுக்கு முன்னதாக நாடு திரும்புமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, பலர் நாடு திரும்பியுள்ள போதிலும், சிலர் இன்னமும் திரும்பவில்லை. இதையடுத்து, ஜனவரி 15ஆம் நாள் வரை அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை அரசியல் ரீதியாக நியமனம் பெற்ற தூதுவர்கள், இராஜதந்திரிகள் சிலர் தொடர்ந்தும் அங்கேயே பணியாற்றுவதற்கு புதிய அரசாங்கத்திடம் கோரிக்கைகளை விடுத்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

தற்போது, இந்தியா, ரஷ்யா, அவுஸ்ரேலியா, தென்ஆபிரிக்கா, ஜப்பான், சீனா, நோர்வே, பிரான்ஸ், இத்தாலி, சவூதி அரேபியா, கட்டார், மாலைதீவு, பாகிஸ்தான், மியான்மார், பங்களாதேஷ், பலஸ்தீனம், கென்யா, ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில், அரசியல் செல்வாக்கில் நியமிக்கப்பட்ட தூதுவர்கள் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!