என்னையும் கைது செய்யுங்கள்!

அரசாங்கத்தால் கைது செய்யப்படுபவர்களின் வாக்குகள் அதிகரிப்பதால், என்னையும் கைது செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வேட்டையாடும் நடவடிக்கையை கைவிட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். மேலும், மத்திய வங்கி பிணைமுறி தொடர்பாக விசாரணை செய்யுமிடத்தில் நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்த அழுக்கை விட அதற்கு முன்னைய அரசாங்கத்தில் இருந்த பெருமளவான அழுக்குகளும் வெளிவரும். ஜனாதிபதி தேர்தலில் வழக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய தோட்டத் தொழிலாளர்களுக்கு வழக்கப்படுவதாகத் தெரிவித்த ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அரசாங்கத்தை கோரியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!