இலங்கைக்கு வருகிறது புதிய மாற்றம்..!!

எதிர்வரும் வியாழனன்று கொழும்பில் இடம்பெறவுள்ள ஐ.தே.க வின் நாடாளுமன்ற கூட்டத்தின் போது கட்சியில் பாரிய மாற்றமொன்று ஏற்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் தர்ம பிரசங்கம் நடைபெற்ற பின்னர், கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியில் மாற்றத்தை ஏற்படுத்த ஒப்புக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.

“நாங்கள் கட்சியை ஒரு நிறுவனமாக மாற்றுவோம், இது மக்களின் முன்னேற்றத்திற்காக செயல்படும்” ’’ஐ.தே.க ஒரு சிறந்த அதிகாரிகள் குழுவால் கையாளப்படும், அவர்கள் நாட்டுக்கு சிறந்த எதிர்காலத்திற்காக செயல்படுவார்கள்” என அவர் தெரிவித்தார்.இதனிடையே தனது பெயரை வெளியிட விரும்பாத கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவிக்கையிலகட்சியை ஜனநாயகப்பாதையில் மேலும் முன்னெடுத்துச் செல்ல கட்சியின் அரசியலமைப்பு மாற்றப்படும் எனத் தெரிவித்தார்.இதேவேளை கட்சியை மேலும் ஜனநாயக வழியில் கொண்டு நடத்த கட்சியின் அரசியலமைப்பில் மாற்றம் தேவை என முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ன தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!