வரியை 20 வீதத்தினால் குறைக்கப் போகிறாராம் மகிந்த

தனது தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்றதும், 20 வீதத்தினால் வரியைக் குறைக்கப் போவதாக கூறியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

“அதிகளவு வரியினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களால் சரியாக சாப்பிட முடியவில்லை. பணத்தைச் சேமிக்க முடியவில்லை. அதிகளவு வரியே இதற்குக் காரணம்.

நாங்கள் அரசாங்கத்தை அமைக்கும் போது, வரியை 20 வீதத்தினால் குறைப்போம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!