ஐ.தே.க உறுப்பினர்களின் பொறுப்பற்ற அறிக்கையே தேர்தல் தோல்விக்கு காரணம்

இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்றும் , மத்திய வங்கி மோசடி விவகாரம் குறித்தும் சில உறுப்பினர்கள் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிட்டமையினாலேயே கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்தது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு இவ்வாறான அறிக்கைகளை முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, கபீர் ஹாசீம் மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோரே வெளியிட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய வங்கியின் பிணை முறி மோசடியில் தான் ஈடுபடவில்லை என்பதை மோசடி தொடர்பான தடயவியல் அறிக்கை தெட்டத்தெளிவாக எடுத்துக்காட்டிவிட்டது என்றும் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.