அரபுக் கல்லூரி பதிவு மூலம் ‘இராணுவத்தைப் பயன்படுத்த வேண்டாம்’

மத்­ர­ஸாக்கள், அரபுக் கல்­லூ­ரி­களை மீளப் பதிவு செய்து முழு­மை­யான மறு­சீ­ர­மைப்­பொன்றை மேற்­கொள்­வ­த­ற்கு அர­சாங்­கம் நட­வ­டிக்­கைகள் எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் குறித்த பதி­வு­க­ளுக்கு இராணுவத்தைப் பயன்­ப­டுத்­து­வ­த­னூ­டாக முஸ்லிம் மக்­களை அச்­சு­றுத்த வேண்டா­மென கொழும்பு மாவட்ட ஐக்­கிய தேசியக் கட்சி நடா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்­துள்ளார்.

அத்­துடன், நாடாளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி 19 முஸ்லிம் உறுப்பி­பினர்கள் இருக்­கின்ற நிலையில், பிர­தமர் தனித்து சுயா­தீ­ன­மாக செயற்­ப­டாது மக்கள் பிரதி­நி­தி­க­ளிடம் பேச்சு நடத்தி ஆலோ­சனை பெற்று செயற்­பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்­துள்ளார்.

மேலும் நாட்­டி­லுள்ள பெரும்­பா­லான மத்­ர­ஸாக்­களும் அரபுக் கல்லூரிகளும் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. எனினும், புதி­தாக மீண்டும் பதிவு நடவடிக்கைகளை ஏன் மேற்­கொள்ள வேண்­டு­மென்றும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. கேள்வி எழுப்பி­யுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!