அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடத் தீர்மானம் – கருணா

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) குறிப்பிட்டுள்ளார்.

கல்முனை உப பிரதேச செயலக முன்றலில் நேற்று (05 ) இரவு 10 மணியளவில் கட்சி ஆதரவாளர்களை சந்தித்த பின்னர், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவ்ர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள திறமைமிக்க புத்திஜீவிகள் இளைஞர்களை இணைத்துக்கொண்டு தனித்துவமாக போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!