கட்சி சார்ந்து பணியாற்றியதாக நிரூபிக்கமுடியுமா? வேதநாயகன் சவால்

ஒரு அரசியல் கட்சி சார்ந்து தாம் பணியாற்றியதாக யாராவது நிரூபிக்க முடிந்தால் அதனை நிரூபித்து காட்டுமாறு ஓய்வு பெற்று செல்லும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் சவால் விடுத்துள்ளார்.

அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனின் பிரிவு உபசார நிகழ்வு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

இராணுவத்தினரது முழு ஒத்துழைப்பும் தமக்கு பூரணமாக கிடைக்கப்பெற்றதாக அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தமது உரையில் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!