விலகும் முடிவை புதன்கிழமை அறிவிப்பார் தினேஸ்!

ஜெனிவாவில் நாளை மறுநாள் ஆரம்பமாகும். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 43 ஆவது அமர்வில், இலங்கை வெளியுறவு, அமைச்சர் தினேஷ் குணவர்தன எதிர்வரும் புதன்கிழமை உரையாற்றவுள்ளார். உயர் மட்டப் பிரதிநிதிகளின் பிரிவில் பேசுவதற்காக அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்போது,இலங்கையின் இணை அனுசரணையுடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்திலிருந்து விலகும், இலங்கை அரசாங்கத்தின் முடிவை வெளியுறவு அமைச்சர் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!