மலையகத்தை பின்நோக்கி இழுக்க வேண்டாம் – வேலு

”மலையக சமூக மாற்றத்துக்கான விதைகளை தமிழ் முற்போக்கு கூட்டணி விதைத்துள்ளது. எனவே, அவற்றை சிதைக்காமல், உரிய வகையில் பராமரித்து சமூகத்துக்காக அறுவடை செய்யவேண்டிய கடப்பாடு தற்போது ஆளுங்கட்சியில் இருக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு இருக்கின்றது.

எனவே, கட்சி அரசியலை நடத்தி முன்நோக்கி செல்லும் மலையகத்தை பின்நோக்கி இழுக்க வேண்டாம் என வலியுறுத்துகின்றோம்.” என

ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி அலுவலகத்தில் இன்று (28)காலை நடைபெற்ற கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும்,பொதுத்தேர்தலின் பின்னர் ஆட்சி அதிகாரம் எமது கைகளுக்கு வந்த பின்னர், மலையக மறுமலர்ச்சி திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!