சஜித் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பு உதயம்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில், ஐந்து பிரதான கட்சிகள், சிவில் அமைப்புகளின் ஒன்றிணைவுடன் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பு இன்று காலை கொழும்பு- தாமரைத் தடாக அரங்கில் உதயமானது.

ஜாதிக ஹெல உறுமய, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஐக்கிய இடதுசாரி முன்னணி, சிவில் அமைப்புகள் சார்பில் ஜாதிக மஹஜன கட்சி, பிரஜைகள் கூட்ட​ணி சார்பில் அபி புரவெசியோ அமைப்பு, ஊடகவியலாளர்கள் சார்பில் ஜனநாயக ஊடகவியலாளர் அமைப்பு, தொழிற்சங்கங்கள் சார்பில் வெடபிமே அபி அமைப்பு உள்ளடங்கலாக 18 தொழிற்சங்கங்கள், 20 சிவில் அமைப்புகள் இந்த ஐக்கிய மக்கள் சக்தியுடன் கைகோர்த்துள்ளன.

குறித்த தரப்பினருடன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

இந்த நிகழ்வுக்கு ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் அவர் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!