யானை, அன்னம் இல்லை- தொலைபேசியை கையில் எடுக்கிறார் சஜித்!

நாடாளுமன்றத் தேர்தலில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திகூட்டணி தீர்மானித்துள்ளது என்று அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்னம் சின்னத்தில் போட்டியிட ஐதேகவுக்குள் எதிர்ப்புகள் காணப்படும் நிலையிலும், யானை சின்னத்தை விட்டுக் கொடுக்க ரணில் தரப்பு மறுத்து வரும் நிலையிலும் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட புதிய கூட்டணி முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு அணிகள் இந்த தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!