நாடாளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக, சுயேட்சைக் குழுக்களின் சார்பில் மூவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
வன்னி தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சைக்குழுக்களாக போட்டியிடுவதற்காக நேற்றுமுன்தினம் ஒருவரும், நேற்று இருவரும் வவுனியா மாவட்டச் செயலகத்தில் உள்ள தேர்தல் திணைக்களத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
எம்.பி.நடராஜா, இந்திக்க நாமல் லியனகே பத்திரன, கோடோ உட பத்திரனகே நீல்சாந்த ஆகிய மூவருமே சுயேட்சைக் குழுவில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தை செலுத்தியவர்களாவர்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!