கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் இருந்து நளினி நீக்கம்?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலில் இருந்து மனித உரிமை செயற்பாட்டாளரான நளினி ரட்டணராஜா நீக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பல்வேறு தரப்பிலிருந்தும் வெளிவந்த விமர்சனங்களை அடுத்து இந்த முடிவை தமிழரசுக் கட்சி தலைமை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நளினிக்குப் பதிலாக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் சட்டத்தரணி ஒருவர் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் சேர்க்கப்படுவாரென தெரியவருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!