கண்டகாடு தடுப்பு முகாமுக்குள் தீவிரமாகப் பரவும் கொரோனா! – நேற்றிரவு 7 பேர் கண்டுபிடிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

நேற்று மாலை 11ஆவது கொரோனா நோயாளியாக, இலங்கையரான 46 வயதுடைய ஆண் இனங்காணப்பட்டிருந்ததார்.

இந்த நிலையில், நேற்று இரவு 7 பேர் ​மேலதிகமாக இனங்காணப்பட்டுள்ளார்கள். இவர்கள் 7 பேரும் இலங்கையர்கள் என்றும் இத்தாலியிருந்து இலங்கைக்கு வருகை தந்து, கண்டகாடு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் என்றும் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!