விக்கி கூட்டணியின் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய மூவர் கைது!

சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த மூவர் கோப்பாய் பொலிஸாரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். கோண்டாவில்- உப்புமடம் சந்திப் பகுதியில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த போது அவ்வழியே வந்த பொலிஸார் அவர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் சுவரொட்டிகள் மற்றும் அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டி ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!