கொரோனா தடுப்பு தேசிய மத்திய நிலையத்தின் தலைமை அதிகாரியாக இராணுவத் தளபதி!

கொரோனா வைரஸை (கொவிட் 19) தடுப்பதற்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைமை அதிகாரியாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இலக்கம் 1090, ஸ்ரீ ஜயவர்தனபுர, இராஜகிரிய என்ற முகவரியில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தடுப்பதற்கான தேசிய மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருதை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்துவதற்காக குறித்த தேசிய மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!