வடக்கு அபாய வலயமா? – மறுக்கிறது ஜனாதிபதி செயலகம்!

வடக்கு மாகாணம் கொரோனா அபாய வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலை ஜனாதிபதி ஊடகப்பிரிவு மறுத்துள்ளது.

வட மாகாணம், கொரோனா அபாய வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வந்த நிலையிலேயே, இந்தச் செய்தியை ஜனாதிபதி ஊடகப்பிரிவு மறுத்துள்ளது.

இதேவேளை, கொரோனா பரவக் கூடிய அபாய வலயமாக கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களை அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருந்தது. குறித்த பகுதிகளில் இருந்து அதிகளவான கொரொனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமை காரணமாகவே அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!