மானிப்பாயில் வீட்டுக்குள் நுழைந்து வாள்வெட்டுக் குழு அட்டகாசம்!

மானிப்பாய் பகுதியில் நேற்று பிற்பகல் வாள்வெட்டு குழுவினர், வீட்டிற்கு புகுந்து தாக்குதல் நடத்தி பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர். இரண்டு மோட்டார் சைக்களில் வந்த 6 பேர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது வீட்டின் கதவு, யன்னல்கள், அடித்து சேதப்படுத்தியுள்ளதுடன், வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!