நாட்டைப் பிள­வு­ப­டுத்தும் எந்த உள்­ள­டக்­கமும் 20ஆவது திருத்­தத்தில் இல்லை – ஜே.வி.பி.

நாட்டைப் பிள­வுப்­ப­டுத்தும் எந்த உள்­ள­டக்­கமும் 20ஆவது திருத்­தத்தில் இல்லை. விமர்­சிப்­ப­வர்கள் முடி­யு­மானால் நிரூ­பித்­துக்­காட்­டட்டும். அத்­துடன் பல­த­ரப்­பி­ன­ருடன் கலந்­து­ரை­யா­டியே இதனை தயா­ரித்தோம் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பிர­சார செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விஜித்த ஹேரத் தெரி­வித்தார்.

மக்கள் விடு­தலை முன்­னணி பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­துள்ள அர­சி­ய­ல­மைப்பின் 20ஆவது திருத்தம் நாட்டைப் பிள­வு­ப்ப­டுத்தும் வகையில் அமைந்­துள்­ளது என தெரி­விக்­கப்­ப­டு­வது தொடர்­பாக வின­வி­ய­போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

இது­தொ­டர்­பாக அவர் தொடர்ந்து கூறு­கையில்,

நிறை­வேற்று ஜனா­தி­பதி என்ற பெயரில் இருந்து நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை முழு­மை­யாக நீக்­கு­வ­தற்கு, புதிய அர­சி­ய­ல­மைப்பு கொண்­டு­வர நாங்கள் விருப்­ப­மா­கவே உள்ளோம். என்­றாலும் தற்­போது அவ்­வா­றான எத­னையும் செய்­ய­மு­டி­யாது.

நாங்கள் கொண்­டு­வந்­தி­ருக்கும் திருத்­தத்தில் அவ்­வாறு எதுவும் இல்லை. 78 அர­சி­ய­ல­மைப்பு ஊடாக இந்த நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­ம­லாக்­கவே நாங்கள் 20ஆம் திருத்­தத்­தி­னூ­டாக மேற்­கொண்­டுள்ளோம்.

20ஆம் திருத்­தத்தை நாங்கள் பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பித்த பின்னர் அதனை வாசித்து பார்க்­கா­மலே, அது நாட்டை பிள­வுப்­ப­டுத்தும் பிரே­ரணை என சிலர் பிர­சாரம் செய்­து­வ­ரு­கின்­றனர். அவ்­வா­றான ஒரு வாக்­கியம் எனும் எமது பிரே­ர­ணையில் இருக்­கு­மாக இருந்தால் காட்­டட்டும். இல்­லாத விட­யத்தை தெரி­வித்து இந்த திருத்­தத்தை இல்­லா­ம­லாக்க முயற்­சிக்­க­வேண்டாம்.

இந்த பிரே­ர­ணையை அங்­கி­க­ரித்­துக்­கொள்ள மக்கள் அபிப்­பி­ராய வாக்­கெ­டுப்­புக்கு செல்­ல­வேண்டும் என யாரும் தெரி­விப்­ப­தாக இருந்தால், அதற்கும் நாங்­கள்­தயார். அப்­போது மக்­களின் நிலைப்­பாட்டை அறிந்­து­கொள்­ளலாம். மேலும் இந்த திருத்­ததில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பணத்­துக்கு விற்­கப்­ப­டு­வதை தடுத்­துள்ளோம். தற்­போது எமது பிரே­ர­ணையை விம­ரி­சிப்­ப­வர்­களும் பணத்­துக்கு விலை­பாே­ன­வர்­க­ளாகும்.

அத்­துடன் 20ஆவது திருத்­தத்தை நாங்கள் எமது தேவைக்கு ஏற்­ற­வி­தத்தில் தயா­ரிக்­க­வில்லை. இதனை தாரிக்கும்போது பலதரப்பினருடன் கலந்துரையாடி திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம். இதில் இன்னும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என யாரும் தெரிவித்தால் அதுதொடர்பாக கலந்துரையாட நாங்கள் தயாராகவே இருக்கின்றோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!