க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்…!

2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் கணனிமயப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கணனிமயமாக்கப்பட்ட பெறுபேறுகளை மூன்று குழுக்கள் மீளாய்வு செய்து வருவதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இந்த நடவடிக்கைகள் முழுமை பெற்றதன் பின்னர், பெறுபேறுகள் வெளியிடப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!