அர்ப்பணிப்பை கௌரவப்படுத்த தாமரைக் கோபுரம் ஒளிர்விக்கப்படும்!

தாமரை கோபுரம் இன்று மாலை ஒளிர்விக்கப்படும் என சீன தூதரகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவித்தலுக்கு அமைய, கொரோனா ஒழிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறை, பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட அனைவரையும் கௌரவிக்கும் வகையில் இன்று (11) மாலை 6.45 மணியளவில் தாமரைக் கோபுரம் ஒளிர்விக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது தாமரைக் கோபுரம் சிவப்பு நிறத்தில் ஒளிர்விக்கப்படும் என சீனத் தூதரகம் தனது ட்விற்றர் கணக்கில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!