போலி முகவரி கொடுத்து ஆனையிறவு வழியாக குடாநாட்டுக்குள் நுழைந்தவர்! – தேடப்படுகிறார்

ஆனையிறவு சோதனைச் சாவடி ஊடாக வியாழக்கிழமை யாழ்ப்பாணத்துக்குள் நுழைந்த ஒருவர் பற்றிய தகவல்களை கரவெட்டி பிரதேச செயலகம் கோரியுள்ளது.

படையினரது சோதனை சாவடியில் தனது பெயர் இராசா மாணிக்கம் (தேசிய அடையாள அட்டை இல-527452530V) என்றும், முகவரியாக இல 81, கரவெட்டி வடக்கினையும் அவர் பதிவு செய்துள்ளார்.

எனினும் குறித்த முகவரியில் அவரை இனங்காண முடியாத நிலையில் கரவெட்டி பிரதேச செயலகம் அவரது தகவல்களை கோரியுள்ளது.

தகவல் தெரிந்தோர் கரவெட்டி பிரதேச செயலக தொலைபேசி இலக்கமான 0212263258 இற்கு தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!