புத்தாண்டு விழாக்களுக்குத் தடை!

தமிழ், சிங்கள சித்திரை புத்தாண்டு விழாக்களை நடத்தவோ அல்லது மக்களை ஒன்று கூட்டுவதையோ தவிர்க்குமாறு, பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன், புத்தாண்டு கொண்டாட்டங்களை குடும்ப உறவினர்களுடன் வரையறுத்துக்கொள்ளுமாறு, அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனினும், கிராமப்புறங்களில் புத்தாண்டு விழாக்களை நடத்த சிலர் தயாராவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே, கிராமப்புறங்களில் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்துமாறு, பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!