சிறிலங்கா விமானப்படைத் தளபதிக்கு ஒரு ஆண்டு சேவை நீடிப்பு

சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில ஜயம்பதிக்கு சேவை நீடிப்பு வழங்கி சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

சிறிலங்கா விமானப்படைத் தளபதி கடந்த மே 25 ஆம் நாளுடன் ஓய்வுபெறவிருந்தார்.

இந்த நிலையிலேயே அவருக்கு ஒரு ஆண்டு சேவை நீடிப்பை வழங்கி உத்தரவிட்டுள்ளார் சிறிலங்கா அதிபர்.

முப்படைகளின் தளபதி என்ற வகையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

இதன் மூலம், அடுத்த ஆண்டு மே 25 ஆம் நாள் வரை, சிறிலங்கா விமானப்படைத் தளபதியாக, எயர் மார்ஷல் கபில ஜயம்பதி பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!