யாழ் போதானா வைத்திய பணியாளர்களை பாராட்டிய பணிப்பாளர்

கொரோனோ வைரஸ் தொற்று தாக்க இடர்காலப் பகுதியில் வைத்தியர்கள் தாதியர்கள், உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என அனைவரும் யாழ் போதனா வைத்தியசாலையில் இரவு பகலாக சேவையாற்றி வருகின்றனர். குறிப்பாக புதுவருடத்தையும் பொருட்படுத்தாது இரவு பகலாக உத்தியோகத்தர்கள் சேவையாற்றி வருகின்றன்.

இந்நிலையில் அவர் அனைவரையும் வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வரவேற்று பாராட்டி பெருமிதம் அடைந்துள்ளார்.

உலகை உலுக்கி வருகின்ற கொரோனோ வைரஸ் தொற்று இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்த வைரஸ் தொற்றில் யாழ்ப்பாணத்திலும் 7 பேர் இணங்காணப்பட்டுள்ளனர். அத்தோடு சந்தேகத்தில் யாழ் போதனாவிலும் பலர் அனுமதிக்கப்பட்டு பரிசாேதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. – என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!