களத்தில் இறங்கிய பெல்-212, வை-12!

நாட்டிற்குள் அத்துமீறி நுழையும் சட்டவிரோத குடியேற்றவாசிகளை தடுப்பதற்காக விமானப் படையினர் வான்வழி கண்காணிப்பு பணிகளை ஆரம்பித்துள்ளனர். கடற்படையினருக்கு உதவும் வகையிலேயே இந்த கண்காணிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கோவிட் -19 காரணமாக சட்டவிரோதமான குடியேற்றவாசிகள் கடல் வழியாக இலங்கைக்குள் நுழைய முயற்சிக்கும் அச்சுறுத்தல் உள்ளது என்று விமானப்படை தளபதி, ஏர் மார்ஷல் சுமங்கல டயஸ் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, விமானப்படை வை -12 விமானங்களையும் பெல் 212 ஹெலிகொப்டர்களையும் கண்காணிப்பில் ஈடுபடுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!