பிரதேச சபை பணியாளருக்கு கொரோனா மூடப்பட்ட பிரதேச சபை.

வாரியபொல பிரதேச சபை அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தவிசாளர் டீ.பி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அப் பிரதேச சபையின் பணியாளர் ஒருவர், நேற்று கட்டுபொத்த பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளரான, கடற்படை சிப்பாயுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இதன்காரணமாகவே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பொது மக்கள் தொடர்ந்தும் சமூக இடைவெளியை பின்பற்றுமாறும், சுகாதாரத்தைப் பேணுமாறும் சுகாதார அமைச்சு அறிவுறத்தல் விடுத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!