நேற்று ஒரு நாளில் 52 பேருக்கு தொற்று – இதுவரை 420 பேர் பாதிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் நேற்று நள்ளிரவுக்கு சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டனர். இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 420 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும், 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் 35 பேர் கடற்படையினராவர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!