படையினரின் வாத்தியக் குழுவால் வந்த வினை! – தொலைக்காட்சியும் கண்காணிப்பில்

கடற்படையினர் மத்தியில், கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றுவோருக்கும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

விமானப்படை இசை குழுவை சேர்ந்த சிப்பாய் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியதனை தொடர்ந்து அந்த குழுவின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கடற்படை இசை குழுவில் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதனை தொடர்ந்து கடற்படை சிப்பாய் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

கடற்படை இசை குழுவும், விமானப்படை இசை குழுவும் இணைந்து அண்மையில் கொழும்பு மாடி வீட்டு தொகுதிக்கு அருகில் இசை நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.

வீட்டு தொகுதியில் இசை நிகழ்ச்சி நடத்திய இசைக்குழுவினர் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து தொலைக்காட்சிக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பிசிஆர் பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!