பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியை பொலிசாருக்கு வழங்க எதிர்ப்பு!

வடமாகாணத்தில் படையினர் தங்குவதற்காக பாடசாலைகள் பல பொறுப்பேற்கப்பட்டுள்ள நிலையில் பொலிசாரும் சில பாடசாலைகளைக் கோரியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியையும், கிளிநொச்சியில் ஒரு பாடசாலையையும், முதல்கட்டமாக பொலிசார் கோரியுள்ள போதிலும் அவற்றினை வழங்க பாடசாலைகளின் பழைய மாணவர்கள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பொலிசாரிற்கு இதுவரை பாடசாலைகள் வழங்காத போதிலும் இது தொடர்பான அழுத்தங்கள் தொடர்வதாக தகவல்கள் கூறுகின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!