சிரியாவில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 46 பேர் பலி…

சிரியாவின் அலொப்போ மாகாணம் அஃப்ரின் மாவட்டத்தில் உள்ள ஒரு சந்தை பகுதியில் நேன்று குண்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலில் 46 பேர் வரையில் உயிரிழந்துள்ள நிலையில் 50 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் கொண்டுவந்த லாரி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டுகளே வெடித்துள்ளது.

சிரியாவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு குர்திஷ் போராளிகள் தான் காரணம் என துருக்கி அரசு குற்றச்சாட்டியுள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு முதல் சிரியாவில்உள்நாட்டுப்போர் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!