கொரோனா தொற்றில் இருந்து மேலும் 3 பேர் குணமடைந்துள்ளனர்

மேலும் மூன்று பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி இதுவரையில் கொரோனா தொற்றில் இருந்து 139 பேர் பூரணமாக குணமடைந்து வீடு சென்றுள்ளனர்.

இதுவரை 649 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ள நிலையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.