உக்ரைனில் துண்டிக்கப்பட்ட தலையுடன் தெருவில் நிர்வாணமாக நடந்து வந்த பெண் – அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!

உக்ரைனில் பெண் ஒருவர் நிர்வாணமாக கையில் இரத்தம் படிந்த கத்தியுடன், தலை ஒன்றை பிளாஸ்டிக் பையில் வைத்து நடந்த வந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனர். உக்ரைன் நாட்டின் கார்கிவ் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் டாட்டியானா (38). இவருடன் அவரது அண்ணனும் வசித்து வருகிறார். டாட்டியானாவிற்கு கிறிஸ்டினா என்ற 11 வயது மகள் உள்ளார். இந்நிலையில் இன்று யாரும் எதிர்பார்க்காத நிலையில், குடியிருப்பின் உள்ளே இருந்து வெளியே இருக்கும் சாலைக்கு வந்த டாட்டியானா ஒரு கையில் பிளாஸ்டிக் பையில் துண்டிக்கப்பட்ட தலையை வைத்து எடுத்துக் கொண்டு, மற்றொரு கையில் ரத்தம் சொட்டிய கத்தியை பிடித்துக் கொண்டு நிர்வாணமாக நடந்து சென்றார்.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். டாட்டியானாவின் சகோதரர் வீட்டில் கிறிஸ்டினாவின் தலையில்லாத உடல் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் அந்த பெண்ணை மடக்கினர். ஆனால் கையில் உள்ள கத்தியால் குத்துவிடுவேன் என டாட்டியானா மிரட்டியதால், பொலிசார் நீண்ட போராட்டத்திற்கு பின் கைது செய்தனர். இதுகுறித்து அந்த பெண்ணின் அண்ணன் கூறுகையில் டாட்டியானா வேலைக்கு சென்று வந்தார். அவர் ஏழ்மையாக இருந்தாலும், சமூகத்தில் மிகவும் பின்தங்கியிருந்தார் என்று கூற முடியாது என்று கூறியுள்ளார்.

அருகில் வசிக்கும் மற்றொருவர், டாட்டியானா சாதாரணமாகத்தான் இருந்தார். அவளிடம் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதும் தெரியவில்லை. போதை பொருட்களுக்கோ, மதுவுக்கு அடிமையில்லை. பொது விடுமுறை அன்று மது அருந்துவார். குழந்தை கிறிஸ்டினா அழகாக இருப்பார். பள்ளிக்கு சென்று வந்தார். வேறு என்ன சொல்ல முடியும்? என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கான காரணம் சரிவர தெரியவில்லை எனவும், முழு விசாரணைக்கு பின்னர் தான் தெரியும் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!