அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் 10 வருடங்களுக்கு மேலாக அழுகிய நிலையில் கிடந்த சடலம்!

அமெரிக்காவில் உயிரிழந்த தாயின் அடுக்குமாடி வீட்டுக்கு சென்று அவரின் உடைமைகளை எடுக்க சென்ற போது freezerல் அழுகிய நிலையில் சடலம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். நியூயோர்கின் Manhattan-ல் வசித்த பெண் சமீபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அவரின் அடுக்குமாடி வீட்டுக்கு மகன் சென்றார். அங்கு இருக்கும் உடைமைகளை எடுக்கவும், வீட்டின் நிலையை காணவும் சென்றார்.

அப்போது வீட்டில் இருந்த freezer-ஐ திறந்து பார்த்து போது உள்ளே அழுகிய நிலையில் சடலம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கத்தினார். அவர் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றினார்கள். அந்த சடலமானது 10 வருடங்களாக அங்கு இருந்திருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.

மேலும் freezerல் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த அந்த சடலம் ஆணா அல்லது பெண்ணா என இன்னும் தெரியவில்லை. அங்கு வசித்த பெண் சாந்தமானவர் எனவும், அவர் வீட்டில் இப்படி ஒரு சடலம் இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை எனவும் அருகில் வசித்தவர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பொலிசார் விசாரித்து வரும் நிலையில் விசாரணைக்கு பின்னரே இதன் மர்மம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!