முள்ளிவாய்க்கால் மைதானத்தில் நினைவேந்தல் நிகழ்வு!

முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்டு 11 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, எதிர்வரும் 18ம் திகதி முள்ளிவாய்க்கால் மைதானத்தில் நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 18ம் திகதி முற்பகல் 10:30 மணிக்கு ஆரம்பமாகும் இந்த நிகழ்வுக்கு, ஒத்துழைக்குமாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இது ஓர் தேசிய நினைவெழுச்சி நாள், உட்பூசல்களைத் தவிர்த்து தமிழ்த்தேசியத்தால் ஒன்று௯டும் நாள்.

கொத்துக்கொத்தாய் கொல்லப்பட்ட எம் உறவுகளுக்காய் நீதி வேண்டிய பயணத்தில் தமிழராய் ஒன்றிணையும் நாள். இந்நிலையில், அன்றைய தினம் பிற்பகல் 7 மணிக்கு அனைத்து வணக்கத்தலங்களிலும் விசேட மணி ஒலி எழுப்பி இப்பேரவலத்தை நினைவேந்துமாறும் கோரப்படுகிறது.

அந்தச் சந்தர்ப்பத்தில் வீடுகளில் தீபங்கள் ஏற்றி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவு கூறுமாறும், முள்ளிவாய்க்கால் பேரவல நிலைமையை நினைவுபடுத்தும் வகையில் அன்றைய தினம் கஞ்சி தயாரித்து பகிர்ந்து கொள்ளுமாறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!