முகக்கவசங்களை விநியோகிப்பதாக கூறி 30 லட்சம் ரூபாவை மோசடி செய்த நபர் கைது

முகக்கவசங்களை விநியோகிப்பதாக கூறி 30 லட்சம் ரூபாவை மோசடி செய்ததாக தெரிவிக்கப்படும் சந்தேகநபரை கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வத்தளையைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின்படி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்

தமக்கு முகக்கவசங்களை விநியோகிப்பதாக கூறி 30 லட்சத்தை பெற்றுக்கொண்ட செவனகலயைச் சேர்ந்த ஒருவர் இதுவரை முகக்கவசங்களை தரவில்லை என்று செய்யப்பட்ட முறைப்பாட்டின் கீழேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இதேவேளை முறைப்பாட்டாளரின் முறைப்பாட்டுக்கு இணங்க கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 3.5 கிராம் ஹெரோய்னும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!