ஒரே நாளில் எகிறியது கொரோனா!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 52 நேற்றிரவு வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,141 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்ட 52 பேரில் 49 பேர் குவைத்திலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

ஏனையவர்களில் ஒருவர் கடற்படையைச் சேர்ந்தவர் என்றும், மற்றுமொருவர் இந்தோனேஷியாவிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர் என்றும் சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 1,141 பேரில் தற்போது 458 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 674 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 09 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 97 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!