இலங்கையில் பத்தாவது கொரோனா மரணம் பதிவு!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) தொற்று நோய் காரணமாக இன்று (25) பத்தாவது மரணம் பதிவாகியுள்ளது.

குவைத்தில் இருந்து அழைந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இன்று காலை பலியான களுத்துறை – பயகலவை சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது.

51 வயதுடைய குறித்த பெண் இருதய நோயாளி என்பது குறிப்பிடத்தக்கது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!