ஊரடங்கை மீறிய 1,543 பேர் கைது!

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் 1,543 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், 445 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் என்றும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில், ஊரடங்கு உத்தரவை மீறிய 65,390 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 20,926 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!