நாடாளுமன்றத்தில் 50 ஆண்டுகளை பூர்த்தி செய்த பிரதமர் மகிந்தவுக்கு இந்தியப் பிரதமர் வாழ்த்து!

நாடாளுமன்றத்தில் 50 ஆண்டுகளை கடந்துள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் உரையாடியுள்ளார். இது குறித்து இந்திய பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் சிறப்பான உரையாடல் இடம்பெற்றது. நாடாளுமன்றத்தில் அவர் 50 ஆண்டுகளை கடந்து வந்ததற்கு வாழ்த்து தெரிவித்தேன். இலங்கையின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பணிகள் குறித்துப் பேசினேன். மேலும், கொரோனாவை எதிர்த்துப் போராடி வரும் அண்டை நாடான இலங்கைக்கு இந்தியா எப்போதும் தனது ஆதரவை அளிக்கும். தேவையான உதவிகளை அளிக்கும்” என பதிவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!