மரம் அரிவு ஆலைக்கு தீவைத்த விசமிகள்!

அச்சுவேலி- பத்தமேனி பகுதியில் மரம் அரிவு ஆலைக்கு இனந்தெரியாத நபர்களினால் நேற்றிரவு 9 மணியளவில் தீ வைக்கப்பட்டுள்ளது. இனந்தெரியாத விசமிகள் இந்த நாசகார செயலினை செய்துள்ளனர். இது தொடர்பில் மரம் அரிவு நிலைய உரிமையாளர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!