கேப்பாபுலவில் மேலும் 2 கடற்படையினருக்கு கொரோனா!

கேப்பாபுலவு விமானப்படை தளத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த மேலும் 2 கடற்படையினருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு , விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கடற்படையினர் 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று இருப்பதாக இனங்காணப்பட்ட 2 கடற்படையினரும் வெலிக்கந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!