அடுத்தடுத்து ஒரே சூலில் பிறக்கும் 3 குழந்தைகள்! – கல்முனை மருத்துவமனையில் அதிசயம்.

அம்பாறை மாவட்டம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நேற்று முன்தினம் பொத்துவில் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே சூலில் 3 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 35 வயதுடைய பொத்துவில் நகரப் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு பிரவச வலி ஏற்பட்டதை அடுத்து நேற்றுமுன்தினம் காலை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது அங்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர் 3 குழந்தைகள் பிறந்துள்ளன.

2 ஆண் குழந்தைகளும் 1 பெண் குழந்தைகளும் தாயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதில் இரு ஆண் குழந்தைகளும் தலா 1,910 கிராம், 1,960 கிராம் மற்றும் பெண் குழந்தை 1,480 கிராம் நிறையுடன் ஆரோக்கியமாக உள்ளன.

இதற்கு முன்னர் இம்மாதம் மற்றும் கடந்த மாதம், நிந்தவூர் மற்றும் கோமாரி பகுதியைச் சேர்ந்த இரு பெண்களுக்கு ஒரே சூலில் 3 குழந்தைகள் பிறந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!