கொழும்பில் இருந்து 685 பேருடன் புறப்பட்டது இந்திய கடற்படைக் கப்பல்!

இலங்கையில் சிக்கியிருந்த 685 இந்தியர்கள் நேற்று இந்திய கடற்படைக் கப்பல் மூலம், அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கொழும்பு துறைமுகத்துக்கு நேற்றுக்காலை வந்த இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ஜலஸ்வா என்ற கப்பலிலேயே, 685 இந்திய பிரஜைகளும் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட இந்தக் கப்பல் இன்று நண்பகல் தூத்துக்குடி துறைமுகத்தை சென்றடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!